என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரேஷன் அரிசியை பதுக்கியவர் சிறையில் அடைப்பு
- 21 மூட்டைகளில் 1020 கிலோ ரேஷன்அரிசி பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
- ஒரு டன் அரிசியை பதுக்கியவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் தரும புரி,பாலக்கோடு, மற்றும் மாரண்டஅள்ளி பகுதிகளில் தருமபுரி சிவில் சப்ளை சிஐடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் ரோந்துப்பணி மேற்கொண்டனர்.
அப் போது போலீசாருக்கு உலக னள்ளியை சேர்ந்த சுப்ரமணி(50) என்பவர் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனைசெய்துப் பார்த்த தில் அவரது் வீட்டின் அருகே 21 மூட்டைகளில் 1020 கிலோ ரேஷன்அரிசி பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து அவரி டமிருந்து கைப்ப ற்றப்பட்ட சுமார் ஒரு டன் ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பகிடங்கில் ஒப்ப டைக்கப்பட்டது.இதனை அடுத்து சுப்பி ரமணி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்ய ப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்தனர்.
Next Story






