என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா வைத்திருந்த நபர் கைது
- சந்தேகத்தற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரனை நடத்தினர்.
- 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரிராஜன் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி செந்தில் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்தற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரனை நடத்தினர்.
அதில் கிருஷ்ணகிரி செட்டியம்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் சஞ்சய்(வயது19) என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
Next Story






