search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்றாலத்தில் மக்கள் நலப்பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
    X

    கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    குற்றாலத்தில் மக்கள் நலப்பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

    • கூட்டத்திற்கு மாநில தலைவர் செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார்.
    • கலைஞர் சமாதியில் காத்திருக்கும் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

    தென்காசி:

    தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தென்காசி மாவட்டம் குற்றாலம் சேனைத்தலைவர் மண்டபத்தில் நடந்தது.தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்க மாநில தலைவர் செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் புதியவன், மாநில பொருளாளர் ரெங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் வாசுதேவநல்லூர் முருகன் வரவேற்றார்.

    சென்னை உயர்நீதிமன்ற தீர்மானத்தின்படி மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும். என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29-ந் தேதி முதல் சென்னை மெரினா கடற்கரை கலைஞர் சமாதியில் காத்திருக்கும் போராட்டத்தினை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் தூத்துக்குடி ராமசுப்பு, நெல்லை சங்கர், தென்காசி மாவட்ட பொரு ளாளர் அருணாசலம் மற்றும் நிர்வாகிகள், செங்கோட்டை பண்டார சிவன், கடையநல்லூர் ராஜேந்திரன், சங்கரன்கோவில் மாரியப்பன், தென்காசி முத்துக்குமார், அந்தோணி செல்லத்துரைச்சி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் முத்துசாமி நன்றி கூறினார்.

    Next Story
    ×