search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீ பெரியாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம்
    X

    விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    ஸ்ரீ பெரியாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம்

    • ஸ்ரீ பெரியாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
    • பரிவார தெய்வங்கள் மீது தெளிக்கப்பட்டு பின்பு கூடி இருந்த பக்தர்கள் மீதும் தெளிக்கபட்டது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், ஏ.கொல்லஹள்ளி பகுதியில் ஸ்ரீ பெரியாண்டவர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

    சித்திரை மாதம் ஒன்பதாம் நாள் கணபதி பூஜை லட்சுமி ஹோமத்துடன் விழா நிகழ்வு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து முதல் காலை யாகபூஜை, இரண்டாம் கால யாக பூஜை, துவார பூஜை, மண்டப அர்ச்சனை வேதிகா அர்ச்சனை நாடி சந்தனம் நடைபெற்று யாகசாலையில் இருந்து பூஜை செய்யப்பட்டது. தீர்த்தக் குடங்கள் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பங்காளிகள் கோவிலை சேர்ந்த வர்கள் பூஜையில் கலந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரானது மூலவர் மற்றும் பரிவார தெய்வங்கள் மீது தெளிக்கப்பட்டு பின்பு கூடி இருந்த பக்தர்கள் மீதும் தெளிக்கபட்டது.

    கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்வுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் விழா குழுவினர் ஒன்றிணைந்து செய்திருந்தனர்.

    Next Story
    ×