என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிதி கிடைக்காததால் பணிகள் தேக்கம்
- மகாத்மா காந்தி வேலை திட்டத்தில் நிதி கிடைக்காததால் பணிகள் தேக்கம் அடைந்துள்ளன.
- நிதி, தேக்கம், Finance, stagnation,
வாடிப்பட்டி
மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் நிதி வராததால் தொடர் பணிகள் தொடங்குவதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, 420 ஊராட்சி மன்றங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் மூலம் பொதுமக்கள் கண்மாய், ஊரணி, கால் வாய் சீரமைப்பு பணி, மரக்கன்று நடும் பணிகள் செய்து வந்தனர்.
அதன்பின் தற்போது சிறு, குறுபாலம் கட்டும் பணி, பேவர் பிளாக் அமைக்கும் பணி, தடுப் பணை கட்டும் பணி, மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் கட்டும் பணி, சத்துணவு கூடங்கள், ஊட்டச்சத்து மைய கட்டிடங்கள் மரா மத்து பணி என்று தொடர்ச் சியாக பல பணிகள் செய்யப் பட்டு வருகிறது.
இந்த பணிகளுக்குரிய திட்ட மதிப்பீடுகளுக்கு ஏற்ற படி நிதிகள் கிடைக்க தாம தம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பணி செய்த ஒப்பந்தக்காரர்கள் அடுத் தடுத்து தொடரும் வளர்ச்சி திட்ட பணிகளை செய்வதில் தேக்கம் உருவாகும் சூழ்நிலை உள்ளது. எனவே இந்த பணி களை விரைந்து முடிக்க அரசு முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






