search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வார்டு குழு சபை கூட்டம்
    X

    பகுதி சபை கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    வார்டு குழு சபை கூட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வார்டு குழு சபை கூட்டம் நடந்தது.
    • பணியாளர் பூவலிங்கம் வரவேற்றார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் ேசாழ வந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் வார்டு குழு பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டம் ஆறு மையங்களில் நடந்தது.1மற்றும்2 ஆகிய வார்டுக்கு பேட்டை குடிநீர் மேல்நிலைத் தொட்டி வளாகத்தில் நடந்தது.

    வார்டு கவுன்சிலர் ஈஸ்வரிஸ்டாலின் தலைமை தாங்கினார். பேரூராட்சி இளநிலை உதவியாளர் கண்ணம்மா, கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் முத்துச்செல்விசதீஷ்குமார் வரவேற்றார்.

    சுகாதாரப்பணி ஆய்வாளர் முருகானந்தம் கூட்டத்தின் நோக்கம பற்றி பேசினார். இதைத் தொடர்ந்து உறுதி மொழி வாசித்தார்.முன்னதாக பணியாளர் செல்வம் வரவேற்றார். அருண் நன்றி கூறினார்.

    இதே போல் 8-வது வார்டு பகுதியில் வார்டு குழு கூட்டம் நடைபெற்றது. கவுன்சிலரும் அரிமா சங்க தலைவருமான டாக்டர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார். பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    13-வது வார்டு சிவன்கோவில்தெருவில் வார்டு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வார்டு கவுன்சிலர் வள்ளி மயில் மணிமுத்தையா தலைமை தாங்கினார். குழுஉறுப்பினர்கள் சசிகலா கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்ணதாசன் வரவேற்றார்.பேரூராட்சி பணியாளர்கள் சோனை, வெங்கடேசன், பாலமுருகன் பூவவலிங்கம்ஆகியோர் வார்டு குழு மக்கள் பயன்பாடு பற்றி பேசினார்கள். பணியாளர் சந்தோஷ் நன்றி கூறினார்.

    இதே போல் மந்தைக்களம், பேரூராட்சி சமுதாயக்கூடம், ஆர்சி தெரு காளியம்மன் கோவில் தெரு, ஆர்எம்எஸ் காலனி நூலகம் ஆகிய இடங்களில் வார்டு குழு கூட்டம் நடந்தது. ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்ற கூட்டத்திற்கு அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் தலைமை தாங்கி நடத்தினார்கள் பணியாளர் பூவலிங்கம் வரவேற்றார்.

    முடிவில் அசோக்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×