என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்
    X

    வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்

    • வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர்.
    • நாள் முழுவதும் மண்டகப்படியில் தங்கும் சுவாமி-அம்பாள் இரவு கோவிலுக்கு வந்தடைகிறார்கள்.

    மதுரை

    உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடங்கிய நாளில் இருந்தே தினமும் காலை-மாலை வேளைகளில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் 4 மாசி வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பா லித்து வருகின்றனர்.

    நேற்று இரவு கைலாசபர்வதம்-காமதேனு வாகனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். ஒவ்வொரு நாளும் இரவு மாசி வீதிகளில் சுவாமி வலம் வரும்போது நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாலை யோரங்களில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    திருவிழா தொடங்கிய நாள் முதல் 4 மாசிவீதிகளும் இரவு நேரங்களில் விழாக் கோலமாக காட்சியளிக்கி றது. திருவிழாவின் 4-ம் நாளான இன்று பிரியா விடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் ஆகியோர் தங்க பல்லக்கில் எழுந்தரு ளினர். காலை 9 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பாடான சுவாமி-அம்பாள் சின்னகடை தெரு, தெற்கு வாசல் வழியாக வில்லாபுரத்தில் உள்ள பாகற்காய் மண்டகப் படியில் எழுந்தருளினர். முன்னதாக வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக தெற்குவாசல், வில்லாபுரம் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நாள் முழுவதும் மண்டகப்படியில் தங்கும் சுவாமி-அம்பாள் இரவு கோவிலுக்கு வந்தடை கிறார்கள்.

    Next Story
    ×