search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆர்.வி.டி. ராமையா புகழஞ்சலி- படத்திறப்பு விழா
    X

    ஆர்.வி.டி. ராமையா

    ஆர்.வி.டி. ராமையா புகழஞ்சலி- படத்திறப்பு விழா

    • சிம்மக்கல் நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் ஆர்.வி.டி. ராமையா புகழஞ்சலி- படத்திறப்பு விழா நாளை மாலை நடக்கிறது.
    • இவர் கடந்த மாதம் 22 -ந் தேதி காலமானார்.

    மதுரை

    மதுரை சிம்மக்கல் நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் ஆர்.வி.டி. ராமையா கடந்த மாதம் 22 -ந் தேதி காலமானார். இவருக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் பட திறப்பு விழா நாளை (25-ந் தேதி) நடக்கிறது.

    மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள கே.வி. துரையப்ப நாடார்- தேனம் மாள் திருமண மகாலில் மாலை 5 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு சிம்மக்கல் நாடார் உறவின்முறை பொருளாளர் வள்ளி ராஜன் தலைமை தாங்குகிறார்.

    சிம்மக்கல் நாடார் உறவின் முறை தலைவர் திலகர், துணைச்செயலாளர்கள் மாரிக்கனி, செல்வராஜன், துணைத் தலைவர்கள் செல்வமோகன், தங்கையா ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். விழாவில் ஆர்.வி.டி ராமையா படத்தை தமிழ்நாடு நாடார் பேரவை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் திறந்து வைக்கிறார்.

    நாடார் மகாஜன சங்க தலைவர் முத்துச்சாமி, ெதட்சண நாடார் சங்க செயலாளர் ராஜகுமார், கோவை நாடார் உறவின் முறை தலைவர் சந்திர சேகரன், நாடார் முன்னேற்ற சங்க செயலாளர் பெரீஸ் மகேந்திர வேல் மற்றும் நிர்வாகிகள் டேனியல் தங்கராஜ், ஓம்சேர்மபிரபு, பெனிட்கரன், அப்பா சுவாமி, புறா மோகன், பொற்கூடம் எஸ்.வி. ராணி, ஆத்திக்குளம் கார்த்திக், பாத்திரக்கடை ராஜசேகர், பாலமேடு கார்த்திக், வெற்றிக்குமார் உள்பட பலர் புகழஞ்சலி செலுத்து கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாடார் பேரவை, அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை, பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள், ஆலங்குளம் நாடார் இளைஞர் பேரவை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    மதுரை பாலமேடு, வில்லா புரம், மீனாட்சி தோப்பு, ஆனையூர், அனுப்பானடி நாடார் உறவின்முறை நிர்வாகிகள், திலகர் திடல் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளும் பங்கேற் கின்றனர்.

    விழா ஏற்பாடுகளை ஆர்.வி.டி.ஆர் வினோத் பிரகாஷ் மற்றும் சிம்மக்கல் நாடார் உறவின்முறை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×