search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துரோக வரலாற்றில் ஓ.பி.எஸ். இடம் பிடித்துவிட்டார்-ஆர்.பி.உதயகுமார்
    X

    ஆர்.பி.உதயகுமார் 

    துரோக வரலாற்றில் ஓ.பி.எஸ். இடம் பிடித்துவிட்டார்-ஆர்.பி.உதயகுமார்

    • துரோக வரலாற்றில் ஓ.பி.எஸ். இடம் பிடித்துவிட்டார் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
    • அ.தி.மு.க. தலைமைகழகம் என்ன உங்கள் தாத்தா வீட்டு சொத்தா? இல்லை உங்கள் சொத்தா?.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று கூறியதாவது:-

    தமிழகத்தில் 50 ஆண்டு களாக சேவை செய்து சாமானிய மக்களுக்கு அரசியல் அங்கீகாரத்தை ஜனநாயக அடிப்படையில் பெற்று தந்த அ.தி.மு.க. இயக்கத்தை புரட்சித் தலைவர் தொடங்கினார்.

    அதன்பின் ரத்தம் சிந்தி வேர்வை சிந்தி, உலக தலைவர்கள் பாராட்டும் வழியில் புரட்சிதலைவி இந்த இயக்கத்தை மூன்றாம் பெரிய இயக்கமாக மாற்றி சிறப்பாக வழிநடத்தி னார்கள்.

    தற்போது எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகை யில் கழக ரீதியில் 70 மாவட்ட கழகச் செயலா ளர்கள், 70க்கும் மேற்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், 2500 மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் எல்லாம் தி.மு.க.வை எதிர்க்க சிம்ம சொப்பனமாகவும், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தொண்ட ர்களின் கோரிக்கை யை ஏற்று எடப்பாடியார் இடைக்கால பொதுச் செய லாளராக பொறுப்பேற்றார்

    அதனைத் தொடர்ந்து ராமருக்கு பட்டாபிஷேகம் சுட்டுவது போல் விழா நடைபெற்ற போது அங்கு லட்சுமணனாய் உடனி ருந்து அந்த தியாகத்தில் இடம்பெற்றார். அதே சேவையால் வரலாற்றில் இடம்பெற வேண்டியவர் அந்தக் கோட்டை தாண்டி சென்னையில் அ.தி.மு.க. தொண்டர்களின் கோவி லாக வணங்கும் தலைமை கழகத்தில் வன்முறையை நிகழ்த்தி உள்ளார் ஒ.பி.எஸ்.இதன்மூலம் துரோக வரலாற்றில் இடம்பிடித்து விட்டார் ஓ.பன்னீர்செல்வம்.

    ஓ.பி.எஸ். 3 முறை தமிழகத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்று தன்னை இந்த நிலைக்கு உயர்த்தி ஆற்றும்பணிக்கு கோயிலாக இடம் பெற்றிருக்கும் தலைமை கழகத்தை ரவுடி களால், குண்டர்க ளால், காட்டுமிராண்டிகளால் இவர்களை வைத்து காலால் எட்டி உதைக்கும் சம்பவத்தை கண்டு தொண்டர்கள் இதயத்தில் ரத்தம் வடிந்து வருகிறது. இவர் செய்த செயலால் தலைமை கழகத்தை சீல் வைக்கும் வகையில் முடிந்து உள்ளது

    அலுவலகத்தில் இருந்த கோப்புகள் எல்லாம் ஓ.பி.எஸ். வந்த வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளது. அ.தி.மு.க. தலைமைகழகம் என்ன உங்கள் தாத்தா வீட்டு சொத்தா? இல்லை உங்கள் சொத்தா? இது ஒன்றரைகோடி கழகத் தொண்டர்களின் சொத்தாகும்.

    கழகத்திற்கு மாசு ஏற்படும் வகையில் இதுபோன்று ஈடுபட்டால் அம்மா பேரவை ராணுவப்படையாக பாதுகாப்பு பணியில் முன்னே நிற்று அ.தி.மு.க.வையும், தலைமை கழகத்தை யும் காக்கும் தியாக பொறு ப்பில் இருப்போம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×