என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குழந்தை சாவில் மர்மம் நீடிப்பு
- திருப்பரங்குன்றத்தில் குழந்தை மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
- அதனை யாராவது கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மகாராஜன் (வயது 40). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த 38 நாட்களுக்கு முன்பு 3-வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு யாழ் இசைவேந்தன் என்று பெயர் சூட்டினர்.
இந்த நிலையில் சித்ரா பள்ளிக்குச் சென்ற தனது மூத்த மகனை அழைத்து வர நேற்று மாலை 4 மணிக்கு புறப்பட்டார். குழந்தை யாழ் இ்சைவேந்தன் தூங்கிக் கொண்டிருந்ததால் அவனை தொட்டிலில் படுக்க வைத்து வீட்டை பூட்டி விட்டுச் சென்றார்.
பள்ளிக்குச் சென்று மகனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்த சித்ரா தொட்டிலில் படுக்க வைத்திருந்த குழந்தையை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக பல்வேறு இடங்களில் குழந்தையை தேடினார். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை.
இரவு 7 மணி அளவில் பக்கத்து வீட்டுக்காரர் தனது மாடி தண்ணீர் தொட்டியில் நீர் நிறைந்து விட்டதா? என பார்க்க சென்றபோது தொட்டியில் குழந்தை பிணம் கிடப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் குழந்தை மர்மமாக இறந்துள்ளதால் அதனை யாராவது கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்