என் மலர்
உள்ளூர் செய்திகள்

முனியாண்டி கோவில் உற்சவ விழா
- மதுரை மகபூப்பாளையத்தில் முனியாண்டி கோவில் உற்சவ விழா நடந்தது.
- இதில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரை
மதுரை மகபூப்பாளையம் வைத்தியநாதபுரத்தில் காணியாளன் பொன் முனியாண்டி சுவாமி கோவில் 75-வது ஆண்டு உற்சவ விழாவை முன் னிட்டு நடைபெற்ற அன்னதானத்தை தேவகி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பெட்கி ராட் தொழில் பயிற்சி பள்ளியின் நிர்வாக இயக்குனர் சுப்புராமன் தலைமை வகித்தார். மாநக ராட்சி உதவி பொறியாளர் பாஸ்கர பாண்டியன், 59-வது வட்ட தி.மு.க. அவைத் தலைவர் சந்திரன், லட்சுமி அம்மாள் மகளிர் குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகஸ்தர்கள் தலைவர் பிச்சமுத்து, உதவி தலைவர் மணிகண்டன், செயலாளர் பூசாரி அ.பி.குமார், உதவி செயலாளர் அருணகிரி, இணைச்செயலாளர்கள் ராஜசேகரன், குரு மூர்த்தி, பொருளா ளர் மும்பை ஆர்.கண்ணன், அறங்காவலர் கணேசன், மக்கள் தொடர்பாளர் முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர்.






