search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரோக்கிய அன்னை திருவிழா
    X

    கொடியேற்றத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

    ஆரோக்கிய அன்னை திருவிழா

    • வாடிப்பட்டியில் ஆரோக்கிய அன்னை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்குதந்தை வளன் தலைமையில் இறக்கப்பட்டு நன்றிதிருப்பலியுடன் விழா நிறைவுபெறுகிறது.

    வாடிப்பட்டி

    தென்னகத்து வேளாங்கன்னி என்று போற்றப்படும் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் திருவிழா நேற்று (29ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாள் நேற்று மாலை 6 மணிக்கு மதுரை மறைமாவட்டபேராயர் அந்தோணிபாப்புசாமி தலைமையில் கொடியே ற்றமும், சிறப்பு திருப்பலியும் நடந்தது.

    முக்கியவிழாவான செப்டம்பர் 8-ந்தேதி (வியாழக்கிழமை)ஆரோக்கிய அன்னையின் பிறப்புப்பெருவிழா, இறைவார்த்தை சபை 147-வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவஊற்று இயேசுவின் அருமருந்து 22-வதுஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடக்கிறது. அன்றுமாலை 5மணிக்கு நற்கருணை ஆராதனையும், 6 மணிக்கு முப்பெரும் விழாகூட்டு திருப்பலியையும் சேலம்மறை மாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் நடத்துகிறார். இரவு 7மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் வண்ணவிளக்குகள் மலர்க ளால் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர்பவ னியும் நடக்கிறது.

    9-ந்தேதி (வெள்ளிக்கி ழமை ) காலை 6.30 மணிக்கு ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்குதந்தை வளன் தலைமையில் இறக்கப்பட்டு நன்றிதிருப்பலியுடன் விழா நிறைவுபெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை எஸ்.வி.டி.அதிபர் அந்தோணி ஜோசப்அடிகளார், பங்குத்தந்தை வளன், உதவி பங்குதந்தை குழந்தையேசுதாஸ் அடிகளார் மற்றும் இருபால் துறவியர்கள், பங்குமக்கள் செய்துவருகின்றனர்.

    இதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ்இன்ஸ்பெக்டர் கனகசபாபதி தலைமையில் போலீசார்செய்திருந்தனர்.

    Next Story
    ×