search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை திட்டம் தொடக்க விழா
    X

    தூய்மை திட்டம் தொடக்க விழா

    • தூய்மை திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
    • ‘‘நம்ம ஊரு சூப்பரு’’ தூய்மை திட்டம் மற்றும் சுகாதாரப் பணிகள் தொடக்க விழா நடந்தது.

    உசிலம்பட்டி:

    உசிலம்பட்டி யூனியன் தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சியில் தமிழக அரசின் ''நம்ம ஊரு சூப்பரு'' தூய்மை திட்டம் மற்றும் சுகாதாரப் பணிகள் தொடக்க விழா நடந்தது. யூனியன் தலைவர் ரஞ்சனி சுதந்திரம் தலைமை தாங்கினார்.

    ஆணையாளர் கண்ணன், துணை ஆணையாளர் தெய்வராமன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா, துணைத்தலைவர் மணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் தனலட்சுமி பன்னீர்செல்வம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தூய்மை திட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்த திட்டத்தின் மூலம் கிராமங்களில் மற்றும் தெருக்களில் சாக்கடை, குப்பைகளை அப்புறப்படுத்துவது, கிராமத்தை சுகாதார முறையில் வைத்துக் கொள்வது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

    Next Story
    ×