என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
- பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை
மதுரை அழகப்பன் நகர், செம்பருத்தி தெருவை சேர்ந்த பொன்னையா மனைவி ஜெயா (வயது 47). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஜெயா சம்பவத்தன்று இரவு வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போது அவரை ஒரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். ஜெயா வீட்டின் அருகே நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் வந்தவர்கள், ஜெயா அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதுதொடர்பாக ஜெயா, சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






