என் மலர்
உள்ளூர் செய்திகள்

இலவச கண் பரிசோதனை முகாம்
- இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
- 120 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர்
வாடிப்பட்டி
மதுரை வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மந்தை திடலில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் வாடிப்பட்டி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்தநாள் விழாவையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு வட்டார தலைவர் பாலசரவணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட துணை தலைவர்கள் கராத்தே சிவா, கச்சைகட்டி பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காக்கும் கரங்கள் நற்பணி மன்ற செயலாளர் கண்ணன் வரவேற் றார். இந்த முகாமில் கிருஷ்ணன் கோவில் கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவ அலுவலர் சுவாதி தலைமையில் செவிலியர்கள் ராஜேஸ்வரி. சங்கரேஸ்வரி, தாமரைச்செல்வி, ஜெயராணி, ஜெயகர் ஆகியோர் 120 பேருக்கு கண் பரி சோதனை செய்தனர். அதில் 108 பேருக்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள பரிந்துரை செய்யப்பட்டது.
இதில் நிர்வாகிகள் எம்.ஏ.முத்து, ராஜேந்திரன், கார்த்திகேயன், முத்துகாமாட்சி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர தலைவர் ராம்குமார் நன்றி கூறினார்.






