search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம மக்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா

    • கிராம மக்கள் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்டோருக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கினார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றி யத்துக்கு உட்பட்ட பூதமங்க லம் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நடந்தது.

    பூதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சின்னகருப்பன் பொங்கல் வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.பொங்கல் திருநாளை முன்னிட்டு பூதமங்கலம் தூய்மை பணியாளர் களுக்கு பொங்கல் பரிசாக பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி பருப்பு, முழு கரும்பு, சீருடைகள் வழங்கப்பட்டது. பணித்தள பணியாளர்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன. 50-க்கும் மேற்பட்டோருக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கினார்.

    இந்த விழாவில் பூதமங்க லம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பகதூர், தும்பைபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் அயூப் கான், வஞ்சிநகரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி, கச்சிராயன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் அமிர்தம் ஆண்டிச்சாமி, அட்டப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ணன், பூதமங்கலம் ஊராட்சி செயலர் வடிவேலன், சமூக ஆர்வலர் தேவராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பணித்தள பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    மேலூர் யூனியன் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, துணை தலைவர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலச்சந்தர், ஜெயபாலன், ஊராட்சி மன்ற தலைவர்கள் திருவாதவூர் இளவரசன், ஆட்டுக்குளம் சிவன் ராஜன், சூரக்குண்டு நிர்மலா ஸ்டீபன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி செயலர்கள், யூனியன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×