search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திரவுபதி சபதம் முடித்தல் நிகழ்ச்சி
    X

    திரவுபதி சபதம் முடித்தல் நிகழ்ச்சி

    • சோழவந்தானில் திரவுபதி சபதம் முடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
    • நாளை இரவு கோவில் வளாகத்தில் தீர்த்தவாரி விழா, அம்மன் ஊஞ்சல் நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி நடைபெறும்.

    சோழவந்தான்

    சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவில் 9-ம் நாள் திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். இரவு திரவுபதி வேடம் புரிந்து அம்மன் புறப்பாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை 4ரத வீதிகளிலும் வலம் வந்து வழிநடையே பொதுமக்கள் திரளாக கண்டு களித்தனர். துரியோதனனை குடல் உருவி மாலை போடும் பாவனை நிகழ்ச்சி, கூந்தல் முடித்து சபதம் முடித்தல் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) மாலை பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) இரவு கோவில் வளாகத்தில் தீர்த்தவாரி விழா, அம்மன் ஊஞ்சல் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெறும். வெள்ளிக்கிழமை மாலை பட்டாபிஷேகம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் அர்ஜுனன், திருப்பதி, ஜவகர்லால், குப்புசாமி, செயல் அலுவலர் இளமதி உள்பட பலர் செய்துள்ளனர்.

    Next Story
    ×