search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காது கேளாதோர் விசிலடித்து போராட்டம்
    X

    காது கேளாதோர் விசிலடித்து போராட்டம்

    • மதுரை கலெக்டர் அலுவலகத்தில் காது கேளாதோர் விசிலடித்து போராட்டம் நடத்தினர்.
    • ஒரு சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வழங்க வேண்டும், வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்ட காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் வளாகத்தில் அமர்ந்து விசில் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் ஒரு சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வழங்க வேண்டும், வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும், ஓட்டுநர் உரிமம் வழங்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும், மாதாந்திர உதவித் தொகையை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்பட பல்வேவறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    பின்னர் இது தொடர்பாக அவர்கள் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    Next Story
    ×