என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சதுர்த்தியன்று சந்திரமுகி-2 வெளியாகும்
    X

    விநாயகர் சதுர்த்தியன்று சந்திரமுகி-2 வெளியாகும்

    • விநாயகர் சதுர்த்தியன்று சந்திரமுகி-2 வெளியாகும்.
    • மதுரையில் நடிகர் ராகவாலாரன்ஸ் பேட்டியளித்தார்.

    மதுரை

    ராகவா லாரன்ஸ் நடிப்பில் ருத்ரன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

    இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் மதுரை செல்லூர் திரை யரங்கில் ரசிகர்க ளுடன் அமர்ந்து ருத்ரன் படத்தைப் பார்த்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    அம்மா பாசம் என்பதால் ருத்ரன் படத்தில் நடித்தேன். குடும்பம், குடும்பமாக ருத்ரன் பார்க்க வருகிறார்கள். இதனை மாஸ் படமாக்கி வசூலை கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி.

    "செல்போனுக்கு கொடுக்கும் மரியாதை கூட, தாய்க்கு தருவதில்லை" என்று நான் இந்த படத்தில் பேசிய வசனம், ரசிகர்க ளிடம் பெரிய அளவில் சென்று சேர்ந்துள்ளது. படத்தை பார்த்துவிட்டு நிறைய தாய்மார்கள் செல்போனில் கூப்பிட்டு பாராட்டுகின்றனர். நான் குடும்பத்தோடு அதிகம் இணக்கமாக இருப்பவன். என் திரையுலக வெற்றிக்கு குடும்ப படங்களே காரணம்.

    இப்போது நல்ல படத்திற்கு கூட விமர்சனம் வருகிறது. விமர்சனம் என்பது தனிநபர் விமர்ச னமாக இருக்கக்கூடாது. எடுக்கும் படத்தை நன்றாக எடுக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்பு வார்கள். அதில் சிறுதவறு ஏற்பட்டால் அது குற்றமாகாது. எவ்வளவு விமர்சனம் செய்தாலும், இந்த படம் தியேட்டரில் வசூலை குவிக்கிறது. அவர்களின் விமர்சனத்திற்கு இதுவே பதிலடியாகும்.

    நல்ல கதை வந்தால், மதுரையை பற்றிய படம் எடுப்பேன். 'சந்திரமுகி-2' பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டது. 3 பாடல், ஒரு சண்டை மட்டுமே பாக்கி உள்ளது. ஜிகர்தண்டாவும் முடிந்து விட்டது.

    காஞ்சனா-2 படத்திற்கு கதை எழுதி வருகிறேன். பெரிய இடைவெளி இல்லாமல், இனி தொடர்ந்து படங்களில் நடிப்பேன். 'சந்திரமுகி-2' விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×