என் மலர்
உள்ளூர் செய்திகள்

தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
- உசிலம்பட்டி பழைய அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- தனியார் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி பழைய அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளையின் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். புலவர் சின்னன், பேராசிரியர் சூரியராஜன், செயலாளர் லெனின் சிவா, பொருளாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் பொன்ராம் வரவேற்றார். நிர்வாகிகள் ராஜா, ஜெயச்சந்திரன், தனராஜ் முன்னாள் அரிமா கவர்னர் அறிவழகன் ஆகியோர் பேசினர்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட புனே வருமான வரித்துறை முதன்மை ஆணையர் அருண் பரத், அறக்கட்டளையின் காணொலியை அறிமுகம் செய்து, கையடக்க பிரதியை வெளியிட்டார். அதை முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன் பெற்றுக்கொண்டார். இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Next Story