search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    16 வயது சிறுமி கர்ப்பம்
    X

    16 வயது சிறுமி கர்ப்பம்

    • மதுரை அருகே 16 வயது சிறுமி கர்ப்பமானார்.
    • அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததனர்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதியின் மகள் 16 வயது சிறுமி. இவர் அழகு கலை பயிற்சி பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை சென்றவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. அப்போது சிறுமியின் பெற்றோரை செல்போனில் அழைத்த மர்ம நபர் சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் சிறுமி வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

    பெற்றோர்கள் அங்கு சென்று மருத்துவர்களிடம் விசாரித்தபோது, சிறுமி கர்ப்பமாக இருந்ததும், உடல் நலக்குறைவு ஏற்பட்டு கரு சிதைவு ஏற்பட்டு விட்ட தாகவும் தெரிவித்தனர். மேலும் அந்த சிறுமியை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததனர்.

    இதுகுறித்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது அவர் மன்னாடி மங்கலத்தை சேர்ந்த ஒரு வரை காதலித்து வந்தததாக வும், சோழவந்தான் மாரி யம்மன் கோவில் முன்பு காரில் வைத்து தாலி கட்டிய தாகவும், அதன் பின்னர் இருவரும் நெருங்கி பழகியதால் தான் கர்ப்பம் அடைந்ததாகவும் கூறி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சமய நல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். குழந்தை திருமணம் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மன்னாடி மங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்தி ரன் மகன் ஆனந்தகுமார் என்பவரை தேடி வருகின்ற னர்.

    Next Story
    ×