என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
3 பேருக்கு கத்திக்குத்து
- வெவ்வேறு சம்பவங்களில் 3 பேருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், ஹரி, திலீப் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை நெல்பேட்டை, காயிதே மில்லத் நகரை சேர்ந்த சுல்தான் சையது இப்ராஹிம் மகன் அன்வர் முகமது (வயது 21). இவர் நேற்றிரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் ஒரு சிறுவனை மிரட்டிக் கொண்டிருந்தது. இதனை அன்வர் முகமது தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியது.
இதுகுறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் வசிக்கும் ரஹமத்துல்லா (46), அப்துல்லா, முஹம்மது இஸ்மாயில் மற்றும் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை அவனியாபுரம், காமராஜர்நகரைச் சேர்ந்தவர் முத்துக்காளை (26). இவரது சகோதரர் வல்லரசு (22). இவரும், அதே பகுதியில் வசிக்கும் விக்னேஸ்வரன் என்பவரும் ஒன்றாக சேர்ந்து தண்ணீர் வியாபாரம் செய்து வந்தனர். இதில் அவர்களுக்கு முன் விரோதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று இவர்க ளுக்குள் பிரச்சினைஏற்பட வல்லரசுவை விக்னேஸ்வ ரன் மற்றும் அவரது ஆதர வாளர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.
இது தொடர்பாக முத்துக்காளை அவனியா புரம் போலீசில் புகார் கொடுத்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரன், மாரி ச்செல்வம், பெருங்குடி, வாஞ்சிநாதன் தெரு தங்கராஜ் மகன் சதீஸ்வரன் (18) ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கீரைத்துறை, காமராஜபுரம், ஜார்ஜ் ஜோசப் தெருவை சேர்ந்த கதிர்வேல் மகன் விஜயகுமார் (23). சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் இவரை அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பியது. இதுகுறித்து கீரைத்துறை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், ஹரி, திலீப் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்