search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மளிகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் தற்கொலை
    X

    மளிகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் தற்கொலை

    • திருமங்கலம் பகுதியில் மளிகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கோபாலபுரத்தை சேர்ந்த வர் செந்தில்முருகன்(வயது 33). இவரது மனைவி பாப்பாத்தி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    செந்தில்முருகன் டி.புதுப்பட்டியில் மளி கைக்கடை நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து பாப்பாத்தி கணவரை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனால் மனவேதனையில் இருந்த செந்தில்முருகன் நேற்று வீட்டின் மாடி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி தெரியவந்ததும் பாப்பாத்தி திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செந்தில் முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே முத்தையன்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி செல்வி(48). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். செல்வி விவசாயம் மற்றும் மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்தார்.

    குடும்ப பிரச்சினை காரணமாக செல்வி கடந்த 16-ந்தேதி விஷம் குடித்துவிட்டார். இதைய டுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சி கிச்சைக்காக அவரை மதுரை அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு செல்வி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக அவரது மகன் தங்கராமன் சிந்துபட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வில்லூர் அருகே தென்னமநல்லூரை சேர்ந்தவர் கருப்பணன்(32). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கருப்பணன் கோவையில் கம்பி கட்டும் தொழில் செய்து வந்தார். அவருக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சொந்த ஊர் வந்த அவர், அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார்.

    இதனால் மனைவி சித்ரா கோபித்துக்கொண்டு தனது அத்தை வீட்டுக்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்த கருப்ப ணன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய புகாரின்பேரில் வில்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×