search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 வீடுகளில் புகுந்து பணம் திருட்டு
    X

    3 வீடுகளில் புகுந்து பணம் திருட்டு

    • பழங்காநத்தம் பகுதியில் 3 வீடுகளில் புகுந்து பணம் திருடப்பட்டது.
    • இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம், மாடக்குளம் மெயின் ரோடு, மருதுபாண்டியர் நகர், 3-து தெருவை சேர்ந்தவர் ராஜ பிரபு (31).

    அதிகாலை இவருடைய வீட்டில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த ரூ. 5 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பினார். இதுகுறித்து ராஜ பிரபு எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (34). இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர் ரூ.8,700-ஐ திருடிச்சென்று விட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவுசெய்து மேற்கண்ட 2 வீடுகளிலும் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    பழங்காநத்தம் வடக்கு தெருவை சேர்ந்த சேகர் மனைவி ராமலட்சுமி (39). இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர் ரூ.40 ஆயிரத்தை திருடிச்சென்று விட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×