search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்
    X

    கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்

    • மதுரையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மதுரை பெரியார் பஸ் நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.

    மதுரை

    மதுரை தென்பரங்குன்றம், தேவர் சிலை அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக திருப்பரங்குன்றம் போலீசுக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த ஒருவர் பிடிபட்டார். அப்போது அவரிடம் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் தென்பரங்குன்றம் சேகர் மகன் நாகராஜ் (வயது 22) என்பது தெரிய வந்தது. அவரை திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை பெரியார் பஸ் நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் திடீர் நகர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது பெரியார் பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்த ஒருவர் பிடிபட்டார். அவரிடம் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 40) என்று தெரிய வந்தது. அவரை திடீர் நகர் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×