என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்
- மதுரையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மதுரை பெரியார் பஸ் நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.
மதுரை
மதுரை தென்பரங்குன்றம், தேவர் சிலை அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக திருப்பரங்குன்றம் போலீசுக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு பதுங்கி இருந்த ஒருவர் பிடிபட்டார். அப்போது அவரிடம் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் தென்பரங்குன்றம் சேகர் மகன் நாகராஜ் (வயது 22) என்பது தெரிய வந்தது. அவரை திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை பெரியார் பஸ் நிலையம், ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் திடீர் நகர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது பெரியார் பஸ் நிலையத்தில் பதுங்கி இருந்த ஒருவர் பிடிபட்டார். அவரிடம் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 40) என்று தெரிய வந்தது. அவரை திடீர் நகர் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்