என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாதம்பட்டி ஸ்ரீ மூகாம்பிகை கல்லூரியில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி
- கல்லூரியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மூகாம்பிகை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் தலைவர் மூகாம்பிகை கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை வகித்தார்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே மாதம்பட்டியில் ஸ்ரீ மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தனியார் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஸ்ரீ மூகாம்பிகை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் தலைவர் மூகாம்பிகை கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை வகித்தார்.
கல்லூரியின் துணைத் தலைவர் மாரியப்பன், பொருளாளர் ராஜ கவுண்டர், நிர்வாக இயக்குனர் மாதுளம் பூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினராக உளவியல் வாழ்க்கை திறன் பயிற்சியாளர் முதன்மை செயல் அலுவலர் கார்த்திக் வேலு கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக முதலாம் ஆண்டு துறை தலைவர் கவிதா நன்றி கூறினார்.






