என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ்களில் அதிக ஒலி எழுப்பிய 10 ஏர் ஹாரன்கள் பறிமுதல்
    X

      போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு 10 பஸ்களில் தடை செய்யப்பட்ட ஹேர் ஹாரன்களை பறிமுதல் செய்தனர்.

    பஸ்களில் அதிக ஒலி எழுப்பிய 10 ஏர் ஹாரன்கள் பறிமுதல்

    • காரிமங்கலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • 10 பஸ்களில் இருந்து ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தனர்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக செல்லும் பெரும்பாலான தனியார் பஸ்கள் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள் பயன்படு த்துவதுடன் அதிகமான ஒலியுடன் சினிமா பாடல்களை ஒலிபரப்பி வருவதாக பொதுமக்கள், பயணிகள் புகார் தெரிவித்தனர்.

    இதை அடுத்து ஆர்டிஓ தாமோதரன் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் காரிமங்கலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை பயன்படுத்திய 10 பஸ்களில் இருந்து ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அதிக ஒலியுடன் சினிமா பாடல்கள் ஒலிபரப்புவது அதி வேகமாக பஸ்களை இயக்குவது போன்றவை தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.

    Next Story
    ×