search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பகுதிகளில் தாழ்வான மின்கம்பியால் விபத்து ஏற்படும் அபாயம்

    • பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பகுதிகளில் தாழ்வான மின்கம்பியால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • மின்துறையினர் மாதந்திர பராமரிப்பு நாட்களில் இதுபோன்று ஆபத்தான மின் கம்பிகளை தேர்வு செய்து சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பகுதியில் பொம்மிடி, கே என்.புதூர், முத்தம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, ராமியம்பட்டி, கடத்தூர், உள்ளிட்ட துணை மின்நிலையங்கள் உள்ளன.

    இந்த மின் நிலையங்களில் இருந்து வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள் ஆகியவற்றிக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. கிராம பகுதிகளில் விவசாய நிலங்கல், சாலையோரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் என ஏராளமான இடங்களில் மின்கம்பிகள் எட்டினால் கையில் எட்டும் அளவிற்கு மிகவும் தாழ்வாக செல்கின்றன.

    இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் டிராக்டர், பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள், புல்லு கட்டு ஏற்றி செல்லும் வாகனங்களில் உரசி மின் விபத்துக்கள் ஏற்பட்டு சேதம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை இருந்து வருகின்றது. இதை தவிர பல இடங்களில் கம்பிகளில் மரங்களில் உள்ள கிளைகள் உரசி மின் விபத்து ஏற்பட்டு கரும்பு பயிர்கள் எரிந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு வருவது தொடர்ந்து வருகின்றது.

    இதேபோல் மின்கம்பங்கள் பழுதாகி மின்கம்பிகள் வெளியே தெரிந்து எப்போது விழுந்து ஆபத்து ஏற்படுத்துமோ என்ற வகையில் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். மின்துறையினர் மாதந்திர பராமரிப்பு நாட்களில் இசூதபோன்று ஆபத்தான மின் கம்பிகளை தேர்வு செய்து சீர் செய்ய வேண்டும். அவற்றை சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வளர்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×