search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டையில் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை
    X

    செங்கோட்டையில் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை

    • மணிகண்டன்,விக்னேஷ்வரி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • விக்னேஷ்வரி மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையை அடுத்த காலங்கரையில் உள்ள கண்ணன் காம்பவுண்டு பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மனைவி விக்னேஷ்வரி(வயது 26).

    இவர்கள் 2 பேரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நேற்று பண்பொழியில் உள்ள திருமலை கோவிலுக்கு செல்வதற்காக மணிகண்டன் தனது மனைவியை அழைத்துள்ளார்.

    ஆனால் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வெறுப்படைந்த விக்னேஷ்வரி வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    உடனே அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×