என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சென்டிரல் ரெயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கியில் அறிவிப்புகள்
- ரெயில் நிலைய ஒலிபெருக்கி பயன்பாட்டில் இருக்காது என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.
- உத்தரவை திரும்ப பெறக்கோரி மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
சென்னை:
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் புறப்படும் நேரம், வந்து சேரும் நேரம், நடைமேடை குறித்த தகவல்களை தெரிவிக்கும் ஒலிபெருக்கி நடைமுறை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திடீரென நிறுத்தப்பட்டது. ரெயில்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் ரெயில் நிலையத்தில் உள்ள டிஜிட்டல் திரையில் மட்டுமே ஒளிபரப்பப்படும் எனவும், இனிமேல் ரெயில் நிலைய ஒலிபெருக்கி பயன்பாட்டில் இருக்காது என்றும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.
இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சோதனை முறை திட்டத்தை கைவிடுவதாகவும், மீண்டும் சென்டிரல் ரெயில் நிலையத்தில் பழைய முறையில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெற்கு ரெயில்வே அறிவித்தது. இந்த அறிவிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இனி சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்புகளை பயணிகள் கேட்கலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்