search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதலி வேறுஒருவரை திருமணம் செய்ததால் லாரி டிரைவர் தற்கொலை
    X

    காதலி வேறுஒருவரை திருமணம் செய்ததால் லாரி டிரைவர் தற்கொலை

    • சின்ன வட்டார பகுதியில் உள்ள ஒரு பெண்ணை ஒன்றரை வருடமாக காதலித்து வந்துள்ளார்.
    • நேற்று சின்ன வட்டாரப்பகுதி ரைஸ் மில் அருகே உள்ள மாந்தோப்பில் காசிராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள மணத்தூர் பகுதியை சேர்ந்தவர் காசிராஜா (வயது24). லாரி டிரைவரான இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே சின்ன வட்டாரப்பள்ளி பகுதியில் குடியிருந்து வந்தார்.

    இவர் சின்ன வட்டார பகுதியில் உள்ள ஒரு பெண்ணை ஒன்றரை வருடமாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் காசிராஜா மனமுடைந்து காணப்பட்டார்.

    இதனால் நேற்று சின்ன வட்டாரப்பகுதி ரைஸ் மில் அருகே உள்ள மாந்தோப்பில் காசிராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×