search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் துணிகரம்- 8 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை- ரூ.6 லட்சம் பணம், பொருட்களை அள்ளி சென்றனர்
    X

    தூத்துக்குடியில் துணிகரம்- 8 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை- ரூ.6 லட்சம் பணம், பொருட்களை அள்ளி சென்றனர்

    • முதல் தளத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
    • ரூ.6 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய பஸ்நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான ஒரு வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. நேற்று இரவு அங்குள்ள வியாபாரிகள் வழக்கம்போல் கடைகளை அடைத்து வீடுகளுக்கு சென்றனர்.

    இந்நிலையில் இன்று காலை வணிக வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. தொடர்ந்து அருகே உள்ள மேலும் 7 கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் வடபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் உடனடியாக விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடைகளில் இருந்த பணம் மற்றும் விலை உயர்ந்த காமிராக்கள் என ரூ.6 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

    இந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி அதில் பதிவான உருவங்களை கொண்டு, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×