என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே கூடுதல் விலைக்கு மது விற்றவர் கைது
- போலீசார் திருவள்ளூர் அடுத்த காக்களூர், ராமாபுரம், பூங்கா நகர் போன்ற பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- காக்களூர் ஏரிக்கரை அருகே சென்றபோது அங்கு இருந்த நபர் தான் வைத்திருந்த கோணிப்பையுடன் போலீசார் வருவதை கண்டதும் ஓட்டம் பிடித்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிண்டு பா.சீபாஸ் கல்யாண் உத்தரவின்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா மற்றும் திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் திருவள்ளூர் அடுத்த காக்களூர், ராமாபுரம், பூங்கா நகர் போன்ற பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
காக்களூர் ஏரிக்கரை அருகே சென்றபோது அங்கு இருந்த நபர் தான் வைத்திருந்த கோணிப்பையுடன் போலீசார் வருவதை கண்டதும் ஓட்டம் பிடித்தார்.
போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது கோணிப்பையில் 95 மது பாட்டில்கள், 65 பீர் பாட்டில்களும் இருந்து தெரிய வந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விற்பனை செய்ய முயன்றதாக அவரை கைது செய்தனர். அவர் புதுக்கோட்டை மாவட்டம் காத்தக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பிரவீன் ராஜ் (29) என்பவர் ஆவார்.
Next Story






