search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க  சிறப்பு முகாம்-  கலெக்டர் சாந்தி தகவல்
    X

    தருமபுரி மாவட்டத்தில் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க சிறப்பு முகாம்- கலெக்டர் சாந்தி தகவல்

    • தருமபுரி மாவட்டத்தில் இதுவரை சுமார் 5.47 லட்சம் வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர்.
    • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி களிலும் வருகின்ற 4-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சாந்தி கூறியதாவது:-

    தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதளத்திலும் அல்லது Voter Helpline APP (VHA) என்ற செயலி மூலமாக தாங்களே வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை எளிதில் இணைக்கலாம்.

    தருமபுரி மாவட்டத்தில் சுமார் 1479 வாக்குசாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக 6B படிவம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் உதவி மையம், "இ சேவை மையம் மற்றும் மக்கள் சேவை மையம் ஆகியவைகளை அணுகியும் ஆதார் விவரங்களை சமர்பித்து தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

    தருமபுரி மாவட்டத்தில் இதுவரை சுமார் 5.47 லட்சம் வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துள்ளனர். வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    தருமபுரி மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இதற்கான சிறப்பு முகாம் வருகின்ற 4.9.2022 ஞாயிற்றுகிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    இச்சிறப்பு முகாமில் தருமபுரி மாவட்டத்தில் இதுவரையில் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்காமல் உள்ள வாக்காளர்கள், தங்களுக்கு அருகாமையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள 6B படிவத்தினை பெற்று, பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் வழங்கிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×