search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பந்தலூரில் பதுங்கிய சிறுத்தை: வனத்துறை தேடுதல் வேட்டை
    X

    பந்தலூரில் பதுங்கிய சிறுத்தை: வனத்துறை தேடுதல் வேட்டை

    • ட்ரோன் கேமரா மூலம் சேரம்பாடி பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
    • போலீசார் பல்வேறு இடங்களில் சிறுத்தை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த சேரம்பாடி அரசு தேயிலைத் தோட்டக் கழகம் பகுதியில் ஒரு சிறுத்தை பதுங்கி உள்ளது. இது கடந்த சில நாட்களாக அங்கு திரியும் ஆடுகள் மற்றும் நாய்களை அடித்து கொன்று வருகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வனத்துறைக்கு புகாா் தெவித்தனா்.

    புகாரின்பேரில் மாவட்ட வனஅலுவலா் கொம்மு ஓம்காரம் உத்தரவின்பேரில், உதவி வனப்பாதுகாவலா் கருப்பையா மற்றும் ஊழியர்கள் சேரம்பாடிக்கு விரைந்து வந்து ஊருக்குள் பதுங்கி உள்ள சிறுத்தையை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதன் ஒருபகுதியாக ட்ரோன் கேமரா மூலம் சேரம்பாடி பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதுதவிர போலீசார் பல்வேறு இடங்களில் சிறுத்தை நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

    Next Story
    ×