என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொடைக்கானலில் தொடர் மழையால் விவசாய நிலங்களில் மண் சரிவு
- தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
- வில்பட்டி கிராம பகுதியில் கனமழையால் அடுக்கடுக்காக இருந்த விளை நிலங்கள் சரிந்து கடும் சேதுமடைந்துள்ளது.
கொடைக்கானல்:
தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
கொடைக்கானல் மேல்மலை கிராம விவசாய நிலங்களில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த விவசாய பயிர்கள் நாசம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வில்பட்டி கிராம பகுதியில் கனமழையால் அடுக்கடுக்காக இருந்த விளை நிலங்கள் சரிந்து கடும் சேதுமடைந்துள்ளது.இதனால் வேதனையடைந்த விவசாயிகள் மண் சரிவை தடுக்கும் விதமாக மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாத்து வருகின்றனர்.
மேலும் பனிக்காலத்தில் பயிரிடப்படும் பட்டாணி போன்ற பணப்பயிர்களை விளைவிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். ஏற்கனவே பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த காய்கறிகளும் கடும் சேதம் அடைந்துள்ளது.அடுத்த கட்ட விவசாய பணிகளை தொடரவும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மேல்மலை கிராமப்பகுதி விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் வில்பட்டி கிராம விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல லட்ச ரூபாய்க்கும் மேலாக கடன் வாங்கி விவசாயம் செய்தனர். தற்போது கனமழையால் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு முன்வந்து கொடைக்கானல் மலை கிராம விவசாயிகளின் துயர்துடைக்கும் வகையில் விவசாயிகளுக்கு பேரிடர் கால மானியங்களை வழங்கிட வேண்டும்.
விவசாய கடன்களில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளை மீட்டெடுக்கவும், மேலும் அடுத்த கட்ட விவசாய பணிகளை துரிதமாக தொடர இழப்பீட்டுத் தொகையை வழங்கி உதவிடவும் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்