என் மலர்
உள்ளூர் செய்திகள்

விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள்.
விளாத்திகுளம் சக்தி வராகி சித்தர் கோவிலில் அம்மனுக்கு விளக்கு பூஜை
- விளாத்திகுளம் சக்தி வராகி சித்தர் கோவிலில் அம்மனுக்கு விரலி மஞ்சள் மாலை அணிந்து பெண்கள் வழிபாடு நடத்தினர்
- விளக்கு பூஜையில் கலந்து கொண்ட ஒவ்வொரு பெண்களுக்கும் கோவில் நிர்வாகம் சார்பாக புடவை வழங்கப்பட்டது.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் சக்தி வராகி சித்தர் கோவில் புரட்டாசி மாத கடைசி வெள்ளிகிழமையன்று அம்மனுக்கு விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் அம்மனுக்கு விரலி மஞ்சள் மாலை அணிந்தும், பஜனை பாடியும் பெண்கள் பக்தியோடு வழிபாடு நடத்தி வந்தனர். விளக்கு பூஜையில் கலந்து கொண்ட ஒவ்வொரு பெண்களுக்கும் கோவில் நிர்வாகம் சார்பாக விளக்கு பூஜைக்கு தேவையான பொருள்களோடு சேர்ந்து புடவை வழங்கப்பட்டது.
Next Story