search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் மோதி கூலி தொழிலாளி சாவு
    X

    விபத்தில் உயிரிழந்த சேட்டு.

    கார் மோதி கூலி தொழிலாளி சாவு

    • நேற்று இரவு கெங்கலாபுரம் மேம்பாலம், தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது கார் ஒன்று எதிர்பாராத விதமாக சேட்டு மீது மோதியது.
    • விபத்தில், அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பச்சியப்பன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 65). கூலி தொழிலாளி.

    இவர் நேற்று இரவு கெங்கலாபுரம் மேம்பாலம், தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சேட்டு மீது மோதியது. விபத்தில், அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்து கிடந்த சேட்டுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்,

    இந்த விபத்து சம்பவம் குறித்து, தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×