என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி சாவு
- திடீரென்று கட்டிங் மிஷினில் இருந்து எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே கதிர்ப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா (வயது 48). இவர் அதே பகுதியில் உள்ள கால்நடை பண்ணையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பண்ணையில் மாடுகளுக்கு தேவையான தீவனம் வைப்பதற்காக ராஜப்பா அங்குள்ள செடிகளை கட்டிங் மிஷின் மூலம் வெட்டி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கட்டிங் மிஷினில் இருந்து எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகள் பிரேமா வேப்பனபள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து ராஜப்பாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






