என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
- இவருக்கு அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
- எந்த பலனும் அளிக்காததால் மனவேதனையுடன் காணப்பட்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த வேடர்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது23).
கூலித்தொழிலாளியான இவருக்கு அடிக்கடி மதுக்குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதன்காரணமாக அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வந்தார். இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், எந்த பலனும் அளிக்காததால் மனவேதனையுடன் காணப்பட்டார்.
இந்த நிலையில் மோகன்ராஜ் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரனெ்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






