என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
பாச்சலூரில் பெண்ணை கத்தியால் குத்திய தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை
- சிவனை, சரியாக வேலை செய்யவில்லை என்று வேலையை விட்டு நிறுத்திவிடுவதாக உரிமையாளர் எச்சரித்தார்.
- ஆத்திரமடைந்த சிவன் இந்த பிரச்சினைக்கு அங்கு வேலை செய்யும் பெண் தான் காரணம் என்று அவரை தாக்க திட்டமிட்டார்.
பெரும்பாறை:
பெரும்பாறை அருகே உள்ள பாச்சலூர் பேத்தரைப்பாறை பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 58). பாச்சலூர் கரடிப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சிவன் என்ற சிவா (35). இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள மாரிமுத்து என்பவரின் பங்களா வீட்டில் வேலை பார்த்தனர்.
இந்நிலையில் சிவனை, சரியாக வேலை செய்யவில்லை என்று வேலையை விட்டு நிறுத்திவிடுவதாக மாரிமுத்து எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த சிவன் இந்த பிரச்சினைக்கு ராணி தான் காரணம் என்று அவரை தாக்க திட்டமிட்டார். அதன்படி, கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி ராணியின் வீட்டிற்கு சென்ற சிவன் அவரை தகாத வார்த்தைகளால் பேசி, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த ராணி சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தாண்டிக்குடி போலீ சார் வழக்குப்பதிவு செய்து சிவனை கைது செய்தனர்.
இந்த வழக்கு கொடைக்கானல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திக் குற்றம்சாட்டப்பட்ட சிவனிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தர விட்டார்.






