என் மலர்
உள்ளூர் செய்திகள்

கத்தியால் குத்தி கூலி தொழிலாளி கொலை
- வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சிவசக்தி, கந்தனை சரமாரியாக கத்தியால் குத்தினார்.
- ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திேலயே துடி துடித்து கந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள என்.தட்டக்கல் பகுதியை சேர்ந்தவர் கந்தன் (வயது37). கூலி தொழிலாளியான இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சிவசக்தி (23) என்பவருக்கும் இடையே நேற்றிரவு தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சிவசக்தி, கந்தனை சரமாரியாக கத்தியால் குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திேலயே துடி துடித்து கந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த கந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






