என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி அருகே மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலி
    X

    கோத்தகிரி அருகே மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலி

    • துணியை கொடிகம்பியில் போடும்போது எதிர்பாரத விதமாக அர்ஜூன் பிரபுவை மின்சாரம் தாக்கியது.
    • கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    அரவேணு,

    கோத்தகிரி அருகே உள்ள குமரன் நகரை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு அர்ஜூன் பிரபு(24) என்ற மகன் உள்ளார்.

    அர்ஜூன்பிரபு கூலிவேலைக்கு சென்று வந்தார். அர்ஜூன் பிரபுவுக்கு கடந்த மாதம் தான் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர், தனது மனைவி மற்றும் தாயுடன் குமரன் நகரில் வசித்து வந்தார்.

    அர்ஜூன் பிரபு நேற்று வேலைக்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்தார். பின்னர் குளித்து விட்டு துணியை அங்குள்ள கொடிகம்பியில் போட்டார்.அப்போது எதிர்பாரத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    Next Story
    ×