என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி கூலி தொழிலாளி சாவு
- ஓசூர் தேசிய நெடுஞ்சாலை மூக்கண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
- வாகனம் மோதி படுகாயம் அடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள சின்னமுதலைபட்டி பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 55). கூலித் தொழிலாளி.
இவர் நேற்று பெங்களூர் - ஓசூர் தேசிய நெடுஞ்சாலை மூக்கண்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story






