search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூர் அடுத்த மேலூரில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    குன்னூர் அடுத்த மேலூரில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

    • திரளான பக்தர்கள் வழிபாடு
    • பெண் பக்தர்களுக்கு நினைவு பரிசுகள்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னுர் தாலுகாவுக்கு உட்பட்ட மேலூர் ஊராட்சியில் மகாவிநாயகர் கோவில் அமைந்து உள்ளது. இது 33 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட கோவில் ஆகும்.மேலூர் விநாயகர் கோவிலில் மகாகும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

    இதில் ஊர்தலைவர் அர்ஜீனன், கொத்துகார கௌடர் சிவக்குமார், மேக்குநாடு பார்பத்தி கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குண்டன், சாந்தி ராமு, தொழிலதிபர் ராஜேந்திரன், மேக்குநாடு படுகர் நல சங்க தலைவர் தாத்தன், செயலாளர் ராமன், பாலகொலா ஊராட்சி துணைத்தலைவர் மஞ்சை வி.மோகன் மற்றும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரளாக வந்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பெண் பக்தர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    Next Story
    ×