search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணம் பகுதி கோவில்களில் கும்பாபிஷேகம்
    X

    கும்பகோணம் பகுதி கோவில்களில் கும்பாபிஷேகம்

    • கடந்த 11-ந் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
    • விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே கல்லூர் கிராமத்தில் கிபி 9ஆம் நூற்றாண்டில், சோழர் சாம்ராஜ்யத்தின் தலைநகராக இருந்து கும்பகோணத்திலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைந்துள்ள ஒரு அழகான கிராமமாகும்.

    பண்டைய காலங்களில் சிவலோகபுரம் என்று அழைக்கப்பட்ட இந்த கிராமத்தின் தெற்கு புறத்தில் புண்ணிய நிதியான காவிரி நதியும், வடக்கு புறத்தில் கொள்ளிடமும் அமைய பெற்றுள்ளது.

    மூர்த்தி, தலம், தீர்த்தம், ஆகிய மூன்றிலும் பிரசித்திமான இந்தக் கல்லூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவலோகநாயகி, சமேத ஶ்ரீ சிவலோகநாதர், ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள், ஸ்ரீ இரட்டை பிள்ளையார், ஆகிய 3 கோவில்களில் பல மாதங்களாக நடைபெற்று

    வந்த, கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து.

    ஸ்ரீ சிவலோகநாதருக்கு நவகுண்ட பக்ஷமும், ஸ்ரீ சிவலோக நாயகிக்கு பஞ்சகுண்ட பக்ஷமும், பரிவார மூர்த்திகளுக்கு 13 ஏககுண்ட பக்ஷமும், வேத சிவ ஆகம முறைப்படி யாகசாலைகள் அமைக்கப்பட்டு, கடந்த 11ஆம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, புனிதநீர் கொண்டு வருதலுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    நேற்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவில், மகா பூர்ணாஹதியும், அதனை தொடர்ந்து நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள், நந்தி வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது பின்னர், கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், புனித நீர் நிரப்பிய கடங்களில் இருந்த ஓரே சமயத்தில் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்ற, மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது,

    இதில் ஏராளமான பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தேவர், கல்லூர் ராமர், மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் அறங்காவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    Next Story
    ×