என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காத்தவராயசாமி கோவில் கும்பாபிஷேகம்
- முதற்கால யாகசால பூஜையுடன் தொடங்கி பூர்ணாஹூதி நடைபெற்றது.
- பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த பெருங் கடம்பனூரில் காத்தவராயன் சாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில் கும்பாபி ஷேக விழா கடந்த 19-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து, பாலினக பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, முதற்கால யாகசால பூஜையுடன் பூர்ணாஹூதி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, நேற்று 2-ம் கால யாகசால பூஜைகள் முடிவடைந்தவுடன், மகா பூர்ணாஹூதி நடைபெற்று, மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.
பின், சிவாச்சாரியர்கள் கடத்தை சுமந்து கோவிலை சுற்றி வந்து வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், புனிதநீர் பக்த்கள் மீது தெளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுந்தர விநாயகர், காத்தவராயன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதணை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கலந்து கொண்ட பக்தர்களுக்கு நாகப்பட்டினம் தமிழ் சேவா சங்கம் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்