என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி பாரத் பள்ளியில் ரம்ஜான் விழா
- பாரத் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி (சி.பி.எஸ்.இ.) பள்ளியில் ரம்ஜான் விழா கொண்டாடப்பட்டது.
- ஆசிரியர்கள் ரம்ஜானின் மகத்துவம் குறித்து கூறினார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பாரத் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி (சி.பி.எஸ்.இ.) பள்ளியில் ரம்ஜான் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் மணி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது ரம்ஜானின் நோன்பு குறித்தும் ஈகை திருநாளான ரம்ஜான் மாதத்தில் நாம் கடைபிடிக்க வேண்டிய கடமைகள் குறித்து மாணவர்களிடம் எடுத்து கூறினார்.
ஆசிரியர்கள் ரம்ஜானின் மகத்துவம் குறித்து கூறினார்கள். விழாவில் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவின் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story






