என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி நாளந்தா பள்ளியில் மாணவர் பேரவை பதவியேற்பு விழா
- விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
- வாக்குரிமையைப் பயன்படுத்தி, தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு உணர்த்தப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நாளந்தா சர்வதேப் பொதுப்பள்ளியில் மாணவர் பேரவையின் பதவியேற்பு விழா நடந்தது.
இந்த விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பள்ளியின் மாணவத் தலைவர்களை தேர்ந்தெடுக்க டிஜிட்டல் முறையில் வாக்குப்பதிவு வெளிப்படையாக நடத்தப்பட்டது. இதன் மூலம் வாக்குரிமையைப் பயன்படுத்தி, தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு உணர்த்தப்பட்டது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்ற மாணவ பிரதிநிதிகளுக்கு கூடுதல் ஆட்சியர் பதவி பிரமாணம் செய்து வைத்து, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நிறுவனர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், இயக்குனர்கள் வக்கீல் கவுதமன், டாக்டர் புவியரசன் மற்றும் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்