search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி :ரூ.21 ஆயிரத்தை வீசிவிட்டு தப்பிய லாட்டரி வியாபாரிகள்
    X

    கிருஷ்ணகிரி :ரூ.21 ஆயிரத்தை வீசிவிட்டு தப்பிய லாட்டரி வியாபாரிகள்

    • லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் ரோந்து சென்றனர்.
    • லாட்டரி சீட்டுகள், ரூ.21.110 பணம் முதலியவற்றை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    கிருஷ்ணகிரி ,

    கிருஷ்ணகிரி டவுன் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது அப்பகுதியில் லாட்டரி விற்றுக்கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் அவர்கள் வைத்திருந்த லாட்டரி சீட்டுகள், ரூ.21.110 பணம் முதலியவற்றை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    விசாரணையில் அவர்கள் சீனிவாசன் (வயது 40),இம்ரான் (25) என்பதும் தெரியவந்தது.அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் பர்கூர் வெங்கடசமுத்திரம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதியில் போலீசார் அதிரடி வேட்டை நடத்தினர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த பூபதி (51),ரவீந்திரன்(28), கணேசன் (38),விமல் (29)ஆகிய 4 பேர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.200 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×